திமுக சார்பில் இடிந்தகரை கடற்கரையில் மீனவர்களுக்கு சாலை வசதி

ராதாபுரம்: இடிந்தகரை மீனவர்கள் கடலில் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பி வந்து, தாங்கள் கொண்டு வந்த மீன்களை வாகனங்களில் ஏற்றி மீன் விற்கும் தளத்திற்கு கொண்டு செல்கின்றனர். ஆனால், கடற்கரையில் இருந்து மீன் விற்கும் தளத்திற்கு சரியான பாதை வசதியின்றி இருந்தனர்.

இதுகுறித்து மீனவர்கள் திமுக பிரமுகரும், சமூக சேவகருமான விஜயாபதி ஏ.ஆர்.ரகுமானிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன் ஆலோசனையின் பேரில் திமுக சார்பில் ஏ.ஆர்.ரகுமான் தனது சொந்த செலவில் கடற்கரையில் 800 மீட்டர் தொலைவுக்கு சாலை வசதி செய்து கொடுத்தார். இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் மீனவர் பிரதிநிதிகள் இடிந்தகரை வெனிஸ்லாஸ், ரமேஷ், ராமு, செல்சன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related posts

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்

தூத்துக்குடியில் 25 ஆண்டுகளாக நிலுவை உள்ள காவல் நிலைய மரணம் வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவு

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை