சிறப்பு அழைப்பாளராக தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன் எம்எல்ஏ, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ ஆகியோர் கலந்துகொண்டு, தமிழக அரசின் மக்களுக்கான திட்டங்கள், மகளிர் மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டங்கள், சமூக பாதுகாப்பு உள்ளிட்டவைகளில் அரசின் பணிகள் மற்றும் ஏழை எளியோருக்கான நல திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் விளக்கி பேசினர்.
கூட்டத்தில், எம்பி செல்வம், ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், பேரூராட்சி தலைவர் இல்லாமல்லிஸ்ரீதர், பொதுக்குழு உறுப்பினர் எழிலரசி சுந்தரமூர்த்தி, ஒன்றிய துணை செயலா ளர்கள் குப்புசாமி, விக்டர்செல்வகுமார், அமலிசுதாமுனுசாமி, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் பூங்கொடிபழனி, பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் சுகுமார் உட்பட கலந்து கொண்டனர்.