இந்நிலையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் இன்று காலை 10 மணியளவில் காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மத்திய மாவட்டத்துக்கு உட்பட்ட வணிகர் சங்கங்கள், விவசாயிகளின் பிரதிநிதிகள், நெசவாளர்கள், மீனவ சங்கங்கள், தொழில் முனைவோர், தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள், கல்வியாளர்கள், அரசு ஊழியர்களின் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் சந்தித்து கருத்துக்களை கேட்கின்றனர்.
தொடர்ந்து நாளை காலை 10 மணியளவில் சிறப்பு அழைப்பாளர் சந்திப்பு, சென்னை வடகிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்டவர்களுடனும், மாலை 3 மணியளவில் சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கருத்துக்களை கேட்க உள்ளனர். தொடர்ந்து மார்ச் 2ம் தேதி தஞ்சாவூர், விழுப்புரம் மாவட்டத்தில் கருத்துக்களை கேட்க உள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினரையும் அழைத்து வந்து திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினரைச் சந்திப்பதற்கு ஏற்பாடுகளை ஒருங்கிணைக்க வேண்டுமென நிர்வாகிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.