கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தொகுதியின் தற்போதைய கள நிலவரம், வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்கள், தொகுதியில் கூட்டணிக் கட்சியினரின் பலம், திமுகவில் சரி செய்ய வேண்டிய பிரச்னைகள் குறித்து நிர்வாகிகளிடம் தனித்தனியாக கேட்கப்பட்டது. பிரச்னைக்குரிய பகுதிகளில் நிறையக் கேள்விகள் கேட்கப்பட்டன.
சிலவற்றை கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சிலவற்றில் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு நடவடிக்கை இருக்கும் எனவும் குழுவினர் உறுதி அளித்தனர். இதனால் சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. இத்தேர்தல் மிக முக்கியமான தேர்தல் எனவும், வெற்றி என்பது மட்டுமே நம் இலக்காக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.