கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இதில், கூட்டணி மற்றும் தோழமை கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்க உள்ளனர். காஞ்சிபுரம் மாநகர திமுக செயலாளர் சி.கே.வி.தமிழ்செல்வன் நன்றி கூறுகிறார். விழா ஏற்பாடுகளை காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் எம்எல்ஏவுமான க.சுந்தர் மற்றும் காஞ்சி வடக்கு, தெற்கு மாவட்ட திமுகவினருடன் இணைந்து செய்துள்ளனர்.
* அண்ணா வீட்டையே அரங்குக்கு கொண்டு வந்த அற்புதம்
திமுக பவளவிழா பொதுக்கூட்டம் நடைபெறும் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி அருகில் அண்ணா வாழ்ந்த நினைவு இல்லம் உள்ளது. இந்த, இல்லத்தின் முகப்பு அப்படியே தத்ரூபமாக மேடை அருகில் அண்ணா வாழ்ந்த இல்லம் என அமைக்கப்பட்டுள்ளது.