சென்னை: புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், செந்தில்குமார் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது. அமலுக்கு வந்துள்ள சட்டங்கள் அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்க கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு அளித்தார்.