காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வம் வேட்பு மனு தாக்கல்: அமைச்சர், எம்எல்ஏக்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நாடாளுமன்ற (தனி) தொகுதி திமுக வேட்பாளர் சிறுவேடல் செல்வம், அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் உள்ளிட்டே கட்சியினர் தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான கலைச்செல்வி மோகனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் சிறுவேடல் க.செல்வம் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட செயலாளர் எம்எல்ஏ சுந்தர், எம்எல்ஏக்கள் எழிலரசன், வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர், காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகம் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் மேள தாளங்கள் முழங்க ஊர்வலம் இந்திரா காந்தி சாலை, காமராஜர் தெரு, வள்ளல் பச்சையப்பன் தெரு வழியாக காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் சென்று தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான கலைச்செல்வி மோகனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இந்நிகழ்வின்போது, காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, திமுக மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், காங்கிரஸ் கட்சி சார்பில் அருள், ஐயப்பன், குமரகுருநாதன், நாதன், இந்திய முஸ்லிம் கட்சி மாவட்ட செயலாளர் அஸ்லாம் பாஷா, மனித நேய மக்கள் கட்சி சார்பில் சலீம், முன்னாள் மக்கள் நீதி மையம் சார்பில் கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சங்கர், முத்துக்குமார், நேரு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஸ்ற்ரீனிவாசன் லட்சுமிபதி, மதிமுக சார்பில் கருணாகரன்,

திராவிட கழகம் சார்பில் மாவட்ட தலைவர் முரளி, மாவட்ட செயலாளர் இளையவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழரசு, பாசறை செல்வராஜ், மதிஆதவன், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் பொன்மொழி மற்றும் திமுக ஒன்றிய செயலாளர்கள் குமார், படுநெல்லி பாபு, திமுக நிர்வாகிகள் வர்த்தக அணி துணை செயலாளர் ராமகிருஷ்ணன், சீனிவாசன், சிகாமணி, பகுதி செயலாளர்கள் சந்துரு, தசரதன், திலகர், வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி