ஒன்றியத்தில் மக்களுக்கான அரசு அமைய திமுகவினர் ஓய்வின்றி உழைக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்

சென்னை: அண்ணா சொன்ன மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் மக்களுக்கான அரசு ஒன்றியத்தில் அமைய திமுகவினர் ஓய்வின்றி உழைக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: தமிழ்த்தாயின் தலைமகனாக பிறந்து, நமக்கெல்லாம் அண்ணனாக – அறிவு மன்னனாக வழிகாட்டிய பேரறிஞர் பெருந்தகை அண்ணா நினைவுநாள்.

நேற்று அமைதி பேரணியாக சென்ற கழக உடன்பிறப்புகள், பேரறிஞர் சொன்ன கடமை – கண்ணியம் – கட்டுப்பாடோடு உழைத்து மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் மக்களுக்கான அரசு ஒன்றியத்தில் அமைய ஓய்வின்றி உழைக்க வேண்டும். எண்ணி துணிக கருமம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது