திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் வெளியிட்ட அறிக்கை:
முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் ஆட்சி பொறுப்பை ஏற்றபோது, ஏறத்தாழ 6.50 லட்சம் கோடிக்கு அதிகமாக கடன் சுமையோடு ஆட்சியை நடத்த வேண்டிய பொறுப்பு ஏற்பட்டது. ஆனாலும் திறமையாலும், கடும் உழைப்பாலும் எண்ணற்ற அரிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார்.

10 ஆண்டு காலம் முடங்கி கிடந்த 18 நல வாரியங்கள் மீண்டும் சீரமைக்கப்பட்டு, வாரியத்தின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் இரட்டிப்பாக ஆக்கப்பட்டுள்ளன. கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்டிக்கொள்ள ₹4 லட்சம் இலவச நிதி, 3 ஆண்டு காலத்தில் 21 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ₹1646 கோடியில் நலத்திட்ட உதவிகள், 3 ஆண்டுகளில் புதிதாக 16.6 லட்சம் தொழிலாளர்கள் பதிவு என பிற மாநிலங்கள் தமிழ்நாட்டை பின்பற்றக்கூடிய அளவிற்கு அரிய திட்டங்களை முதல்வர் வழங்கியுள்ளார்.

விக்கிரவாண்டியில் திமுகவுக்கு வெற்றி அளிப்பதன் மூலம் முதல்வரின் ஆக்கப்பூர்வமான பணிக்கு மேலும் ஒரு அங்கீகாரம் வழங்க முடியும். இதற்காக விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி சார்பில் திண்ணை பிரசாரம் மேற்கொண்டு திமுகவை வெற்றி பெற வைப்போம்.

Related posts

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு