பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், ‘‘பதவி ஏற்றதும் முதல் பணியாக திண்டுக்கல்லில் இருந்து சபரிமலைக்கு ரயில் பாதை அமைக்கக்கோரி ரயில்வே வாரிய தலைமை நிர்வாக அதிகாரி ஜெயவர்மா சின்காவிடம் கோரிக்கை விடுத்தேன். முதற்கட்டமாக திண்டுக்கல்லில் இருந்து தேனிக்கு ரயில்பாதை அமைக்கப்படும்.
அதன்பின் சபரிமலை வரை ரயில் பாதையை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தேனி, போடி, ஆண்டிபட்டி மற்றும் உசிலம்பட்டி ஆகிய ஊர்களில் புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை விடுத்தேன். திட்ட அறிக்கை தயார் செய்து தரும்படி கேட்டுள்ளார். விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும்’’ என்றார்.