திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்பு

மக்­க­ளவை தேர்­த­லை­யொட்டி, தேர்­தல் அறிக்கை தயா­ரிப்­ப­தற்­காக திமுக துணைப் பொதுச்­செ­ய­லா­ளர் கனி­மொழி எம்பி தலை­மை­யில் 11 பேர் கொண்ட குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது. திமுக செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், சொத்துப் பாதுகாப்புக் குழுச் செயலாளர்-அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழிநுட்ப அணிச் செயலாளர் – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., மாணவரணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா எம்.பி., மருத்துவ அணிச் செயலாளர் மருத்துவர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., சென்னை மாநகர மேயர் பிரியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இக் குழுவினர் கடந்த 5ம் தேதி முதல், தமிழ்­நாட்­டின் முக்­கிய நக­ரங்­க­ளுக்கு சுற்­றுப்­ப­ய­ணம் மேற்கொண்டனர். உரி­மை­களை மீட்க ஸ்டாலி­னின் குரல்-நாடா­ளு­மன்­றத்­தில் ஒலித்­திட வேண்­டிய தமிழ்­நாட்­டின் கருத்­துகள் என்ற தலைப்­பில், பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை சென்னை அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் சிறப்பு அழைப்பாளர்களிடமும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் கருத்துக்களை கேட்டறிந்தனர். தொடர்ந்து பிற்பகலில் திமுகவின் சென்னை வடக்கு, சென்னை வட கிழக்கு, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை நேரில் சந்தித்து பரிந்துரைகளைப் பெற்றனர்.

இதில் வணிகர் சங்கங்கள், விவசாயிகளின் பிரதிநிதிகள், நெசவாளர்கள், மீனவ சங்கங்கள், தொழில் முனைவோர், தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள், கல்வியாளர்கள், அரசு ஊழியர்களின் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள், திமுக நிர்வாகிள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம் நேரில் தங்கள் கோரிக்கைகளை அளித்தனர். மேலும் சென்னை மாவட்ட செயலாளர்கள் மாதவரம் சுதர்சனம், சிற்றரசு, எம்பி கலாநிதி வீராசாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்ற னர்.

Related posts

திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் இன்று சாகச நிகழ்ச்சி