உடுமலை, ஏப்.17: உடுமலை மேற்கு ஒன்றிய திமுக சார்பில், ஆலோசனை கூட்டம் கரட்டுமடத்தில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் செழியன் தலைமையில், ஒன்றிய அவைத்தலைவர் சண்முகவடிவேலு முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன், மடத்துக்குளம் சட்டமன்ற பொறுப்பாளர் சித்திக் பேசினர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார், தேவனூர்புதூர் வாசுதேவன், ஹரி, கோழிக்கடை முருகன், ஊராட்சிதலைவர்கள், கவுன்சிலரகள், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.