சென்னை: 40க்கு 40 திமுக கூட்டணி வென்றதை பொறுக்க முடியாமல் அதிமுகவினர் பிரச்சனை செய்கின்றனர் என சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் அதிமுக தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த வேண்டுமென்று அதிமுகவினர் அமளியில் ஈடுபடுகின்றனர் என்றும் தெரிவித்தார்.