இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்து விட்டு சென்றுள்ளார். 24-ம் தேதி அதிமுக சார்பில் திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தேமுதிக சார்பில் பங்கேற்க உள்ளோம். திருச்சி பொதுக்கூட்டத்தில் 40 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்கிறோம். கேப்டன் விஜயகாந்த் இல்லாமல் தேமுதிக சந்திக்கும் முதல் தேர்தல் இது. 2011 தேர்தலைப் போல வெற்றிக் கூட்டணி தற்போது அமைந்துள்ளது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும். வேட்பாளர் தேர்வு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இன்றோ அல்லது நாளையோ தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதிமுக கூட்டணியைச் சேர்ந்த 40 வேட்பாளர்களும் 25-ம் தேதி ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். தேமுதிக மாநிலங்களவை சீட்டில் யார் போட்டி என பின்னர் அறிவிக்கப்படும்,”இவ்வாறு தெரிவித்தார்.