தேமுதிக நிர்வாகி மாரடைப்பால் சாவு

மேல்மலையனூர்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த வல்லம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்சித்தாமூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார்(41). காய்கறி வியாபாரியான இவர், மேல்சித்தாமூர் தேமுதிக கிளை செயலாளராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் கடந்த 28ம் தேதி சென்னைக்கு சென்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். பின்னர் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்த இவர், தொலைக்காட்சியில் விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தை பார்த்துக்கொண்டிருந்த போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், விஜயகுமாரை மேல்சித்தாமூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் தேமுதிகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூ.23,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் கடன் தீர்ப்பாயத்தின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை :உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து