கவர்னர் எப்போதே ஒப்புதல் கொடுத்துவிட்டார். இலவச அரிசி கொடுக்க நிதி ஒதுக்கப்பட்டு டென்டர் விடப்படவுள்ளது. தீபாவளிக்கு முன்பாக ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு இலவச அரிசி வழங்கப்படும். மத்தியில் எங்களுடைய தேஜ கூட்டணி அரசுதான் உள்ளது. எங்களுக்கு எப்போதும் தேவையான உதவியை மத்திய அரசு செய்து வருகிறது. நாங்கள் எப்போது வேண்டுமானாலும் பிரதமரை சந்திப்போம். இவ்வாறு அவர் கூறினார்.