தீபாவளி முன்பதிவு – காலியான டிக்கெட்டுகள்

சென்னை: தீபாவளியன்று (அக். 31) சொந்த ஊர்களில் சென்றிறங்க ஏதுவாக ரயில்களில் முன்பதிவு தொடங்கியது. அக். 31ல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் முன்பதிவு தொடங்கிய 5 நிமிடத்தில் டிக்கெட் காலியானது. ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம், முன்பதிவு மையங்கள் வழியாக பயணிகள் பயணத்திற்கு டிக்கெட் வாங்கினர். கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரயில்களில் 5 நிமிடத்தில் டிக்கெட் காலியானது. சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்ததால் சிறப்பு ரயில் இயக்க பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related posts

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.54,080க்கு விற்பனை

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னையில் ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இன கட்டுப்பாட்டு சிகிச்சை மேற்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை