Thursday, June 27, 2024
Home » தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கடைகளுக்கு 2.64 லட்சம் மெ.டன் அரிசி பருப்பு அனுப்பி வைப்பு: அமைச்சர் சக்கரபாணி தகவல்

தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கடைகளுக்கு 2.64 லட்சம் மெ.டன் அரிசி பருப்பு அனுப்பி வைப்பு: அமைச்சர் சக்கரபாணி தகவல்

by Arun Kumar

சென்னை: தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கடைகளுக்கு 2.64 லட்சம் மெ.டன் அரிசி , பருப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சென்னை இந்திரா நகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் அமுதம் பல்பொருள் சிறப்பங்காடியில் வெளிச்சந்தை விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 1 கிலோ வெங்காயம் ரூ.30 என்ற விலையில் விற்கப்படுவதை உணவு மற்றும் உணவுபொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்து வாடிக்கையாளர்களிடம் கலந்துரையாடினார். அமுதம் மக்கள் அங்காடி மூலம் சென்னையில் 10 அங்காடிகளில் வெங்காயம் மலிவு விலையில் விற்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலை அங்காடிகளுக்கு 2,28,191 மெ.டன் அரிசி, 19,170 மெ.டன் சர்க்கரை, 5,321 மெ.டன் கோதுமை, 10,972 மெ.டன் துவரம் பருப்பு, 1 கோடியே 12 லட்சம் பாமோலின் பாக்கெட்டுகள் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பொருட்கள் 2 நாட்களில் அனுப்பி முடித்து வைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

அரிசி, கோதுமை, சர்க்கரை மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை ஒதுக்கீட்டின்படி கிடங்கில் இருந்து நியாய விலை அங்காடிகளுக்கு நகர்வு செய்யப்பட்டிருப்பதையும், அங்காடிகளில் போதுமான அளவு இருப்பு வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு நல்ல தரத்துடன் சீரான முறையில் விநியோகம் செய்யப்பட்டு வருவதையும், சென்னை தரமணியில் உள்ள அமுதம் நியாயவிலை அங்காடிகளில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் போது, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் கோபால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் அண்ணாதுரை மற்றும் துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

You may also like

Leave a Comment

five × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi