மேலும் தீபாவளி கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து விழாக்காலம் வரவிருப்பதால் பொது மக்கள் அதிகளவில் குவிந்து புத்தாடைகளை வாங்கிச் செல்லும் நிலையில், தரமான துணிகளை விற்பனை செய்கிறார்களா? அல்லது எக்ஸ்போர்ட் நிறுவனத்திலிருந்து விலை மலிவான துணிகளை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்களா? என்றும் சோதனை செய்தனர். அப்போது கடைகளில் உள்ள கம்ப்யூட்டரில் வாங்கப்பட்டுள்ள மற்றும் விற்கப்பட்டுள்ள பில்லை அவர்கள் ஆய்வு செய்தனர்.
காலை 11 மணிக்குத் தொடங்கிய இந்த சோதனை இரவு 8 மணியைத் தாண்டியும் தொடர்ந்து நடைபெற்றது. முழுசோதனை முடிந்தபிறகே விவரம் தெரிய வரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.