இதனால் காங்கிரஸ் – திரிணாமுல் காங்கிரஸ் இடையிலான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பங்குரா மாவட்டம் பிஷ்ணுபூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் சுஜாதா மண்டல் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அவரது விவாகரத்து கணவர் சவுமித்ரா கான் போட்டியிடுகிறார். இந்த தம்பதி ஜோடி கடந்த 2021ல் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பிரிந்தது. திரிணாமுல் காங்கிரசில் இருந்த சவுமித்ரா கான், கடந்த 2019ல் பாஜகவில் சேர்ந்தார். அப்போது அவரது மனைவிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.