ஓய்வு பெறும் நீதிபதிகளுக்கு பிரிவுபசார விழா

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்துக்கு மே 22 முதல் ஜுன் 2 வரை கோடைகால விடுமுறை விடப்படவுள்ளது. இதையடுத்து ஜுன் மாதம் ஓய்வு பெறவுள்ள இரண்டு நீதிபதிகளுக்கு முன்கூட்டியே பிரிவுபசார விழா நேற்று நடைபெற்றது. உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரும் தமிழ்நாட்டை சேர்ந்த நீதிபதி வி.ராமசுப்ரமணியன் ஜுன் 29ம் தேதி ஓய்வு பெறவுள்ளார். கேரள மாநிலத்தை சேர்ந்த நீதிபதி கே.எம்.ஜோசப் ஜுன் 16ம் தேதி ஓய்வு பெறவுள்ளார்.

இருவருக்கும் நேற்று நடைபெற்ற பிரிவுபசார விழாவில் கலந்து கொண்டு பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “பன்முகத் திறமையும், சிறந்த ஆளுமையும் கொண்டவர் ராமசுப்ரமணியன். மனிதநேயம் மிக்கவர். கலகலப்பும், நகசை்சுவையும் மிக்க ராமசுப்ரமணியம் ஓய்வு பெற்றால் நீதிமன்றம் அதனை இழந்து விடும்” என்றார்.

Related posts

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி