இந்த கூட்டத்தில் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வை.ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை மேம்பாட்டு திட்ட பணிகள், குடிநீர் பணிகள், கட்டிடப் பணிகள் மழைநீர் கால்வாய் பணிகளின் நிலை குறித்தும், முடிவடைந்த பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும் கேட்டறிந்தனர். மேலும் பருவ மழை தொடங்க இருப்பதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் எம்எல்ஏ ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் தென்னவன், ஒன்றிய கவுன்சிலர்கள் எத்திராஜ், பூவண்ணன், ஊராட்சிமன்ற தலைவர்கள் 26 வேப்பம்பட்டு சதா பாஸ்கரன், சேலை கோவர்தனன், பெருமாள்பட்டு சீனிவாசன், கீழானூர் உஷா பிரேம், புல்லரம்பாக்கம் தமிழ்வாணன், செவ்வாப்பேட்டை டெய்சி ராணி அன்பு, ஈக்காடு லாசனா சத்யா மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.