அதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. அதில் 39 ஆயிரத்து 403 பேர் பங்கேற்றனர். நவம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. டிசம்பர் மாதம் சான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டு, 33 பேர் வட்டார கல்விஅலுவலர் பணிக்கு தகுதியுடையவர்களாக தெரிவு செய்யப்பட்டனர். அந்த தெரிவுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. மேற்கண்ட தேர்வில் பங்கேற்றவர்கள் தங்களுக்கான தெரிவை தெரிந்துகொள்ள இணைய தளத்தை பார்க்கலாம்.