அப்போது அங்கிருந்த 3 பேருக்கும் லோகேஷ்குமாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து லோகேஷ்குமாரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி உள்ளனர். தலை உள்பட பல்வேறு இடங்களில் படுகாயமடைந்த லோகேஷ்குமார், குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் பாஜ நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய வேலூர் மாவட்டம் வளத்தூர் புதுமனையை சேர்ந்த பாபு (25), இஸ்மாயில்(24), வசீம்(24) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.