இதில் மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகள் அரியலூர், ஆந்திரா, திண்டுக்கல் போன்ற இடங்களில் உள்ள சிமெண்ட் உற்பத்தி தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை வேலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கிலிருந்து மறுசுழற்சி செய்ய முடியாத 27 டன் குப்பைகளும், வேலூர் ஓட்டேரியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கிலிருந்து 25 டன் குப்பைகளும் லாரிகள் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் ஆலைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். இவற்றை சிமெண்டு தொழிற்சாலையினர் எரிபொருளாக பயன்படுத்த உள்ளனர் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.