சென்னை: புழல் சிறையில் இருந்து பெண் கைதி தப்பிய விவகாரத்தில், வார்டர்கள் கனகலட்சுமி, கோகிலா இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெங்களூரைச் சேர்ந்த ஜெயந்தி என்ற கைதி தப்பியோடினார். சிறைக்குள் கைதிகளுக்கு வழங்கும் வழக்கமான பணிக்கு பிறகு, மாலையில் கணக்கெடுக்கும் போது ஜெயந்தி காணவில்லை. திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் ஜெயந்தி.