விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் 3ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இதுவரை நடைபெற்ற இரு கட்ட அகழாய்வில் சிதைந்த நிலையில் செங்கல் சுவர் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. தற்போது முழுமையான செங்கல் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முழுமையான செங்கல் சுவராக இருப்பதால், முன்னோர்கள் இப்பகுதியில் வசித்ததற்கான குடியிருப்பாகவோ அல்லது தொழிற்கூடமாகவோ இருக்கலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.