பேரிடர் நிவாரண நிதியாக ரூ.10 கோடி வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இமாச்சல பிரதேச முதல்வர் பாராட்டு

சென்னை: பேரிடர் நிவாரண நிதியாக ரூ.10 கோடி வழங்கியதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இமாச்சல பிரதேச முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: இமாச்சல பிரதேச பேரிடர் நிவாரண நிதி-2023க்கு ரூ.10 கோடி நிதியை பெருந்தன்மையாக வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் ஆதரவு பேரிடர் காலங்களில் ஒற்றுமை மற்றும் பரிவுணர்வை பிரதிபலிக்கிறது. தொடர்ந்து ஒன்றிணைந்து கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

ஜப்பானின் புதிய பிரதமராக ஷிகெரு இஷிபா தேர்வு

பனப்பாக்கத்தில் நாளை தொழிற்பூங்கா அடிக்கல் நாட்டு விழா முதல்வர் பங்கேற்கும் விழா பாதுகாப்பு பணியில் 1,600 போலீசார்

தென்னிந்தியாவில் பவாரியா கும்பல் கைவரிசையா? குமாரபாளையம் அருகே சினிமா பாணியில் சேசிங்..வடமாநில கொள்ளை கும்பல் துப்பாக்கி முனையில் கைது..!!