மனைவியுடன் தகராறில் விபரீத முடிவு பசியால் அழுத பெண் குழந்தையை விஷம் கொடுத்து கொன்ற தந்தை: மற்றொரு குழந்தையுடன் தற்கொலை முயற்சி

திருப்பத்தூர்: மனைவியுடன் தகராறில் பசியால் அழுத பெண் குழந்தையை விஷம் கொடுத்து தந்தை கொலை செய்தார். மற்றொரு மகளுக்கும் விஷம் கொடுத்து தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த கிழக்குபதனவாடியை சேர்ந்தவர் சிவக்குமார் (30). டிராக்டர் வைத்து விவசாய பணி செய்கிறார். இவரது மனைவி சத்யா. அஷ்விதா (5), மூன்றரை வயதில் இலக்கியா, 14 மாதத்தில் வேண்டாமணி ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளன.

இருவருக்கும் திருமணம் ஆன மூன்று மாதத்தில் இருந்தே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. பீடி சுற்றும் தொழில் செய்து வந்த சத்யாவுக்கும் சிவக்குமாருக்கும் நேற்றும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மூத்த மகளை மட்டும் அழைத்துக் கொண்டு தாய் வீடான ஜல்லியூர் கிராமத்திற்கு சத்யா சென்றுள்ளார். வீட்டில் இருந்த 14 மாத பெண் குழந்தை பசியால் அழுதுள்ளது. குழந்தையை சமாதானம் செய்ய முடியாத சிவக்குமார் விரக்தி அடைந்து பாலில் விஷத்தை கலந்து கொடுத்துள்ளார்.

பின்னர் சாப்பாட்டில் விஷம் கலந்து தானும் சாப்பிட்டு 2வது குழந்தை இலக்கியாவிற்கும் கொடுத்துள்ளார். அந்த குழந்தை சாப்பிட முடியாமல் வாந்தி எடுக்கவே பயந்துபோய் அண்ணனுக்கு போன் செய்து குடும்ப தகராறில் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டேன். நானும் விஷம் குடித்து விட்டேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து அவர் வந்து மூவரையும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் 14 மாத குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளனர். மற்ற இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related posts

சென்னையில் நேற்று அதிகபட்சமாக மணலியில் 14.49 சென்டி மீட்டர் மழை பதிவு!

மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறு; அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

அருவியில் நண்பர்களுடன் குளித்தபோது திடீர் வெள்ளத்தில் சிக்கி 3 மருத்துவ மாணவர்கள் பலி: 2 மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை