நடப்பு நிதியாண்டின் முன்கூட்டியே வரி வசூல் ரூ.1,48,823 கோடியாக உள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வசூலான ரூ.1,16,875 கோடியுடன் ஒப்பிடுகையில் 27.34 சதவீதம் அதிகம். வரி பிடித்தத்துக்குப் பிறகு வரி செலுத்துவோருக்கு ரூ.53,322 கோடி திருப்பி (ரீஃபண்ட்) அளிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் திருப்பி அளிக்கப்பட்ட தொகையுடன் ஒப்பிடுகையில் 33.7 சதவீதம் அதிகம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.