கோவை : இயக்குநர் பார்த்திபன் அளித்த புகாரில் கோவையை சேர்ந்த கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தான் இயக்கிவரும் டீன்ஸ் படத்தின் கிராபிக்ஸ் பணிகளுக்கு பணம் பெற்று ஏமாற்றியதாக பார்த்திபன் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் சிவப்பிரசாத் மீது பந்தய சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.