அவர்கள் மயிலம் அருகே விளங்கம்பாடியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக சாலையின் குறுக்கே நடந்து சென்ற ஒருவர் மீது கார் மோதியதில் அங்குள்ள டிவைடர் (தடுப்புக்கட்டை) மீது மோதி பின்னர் எதிர்புறம் சென்று கொண்டிருந்த பைக் மீது கார் மோதியது. இந்த விபத்தில் சாலையின் குறுக்கே நடந்து ெசன்றவர் மற்றும் பைக்கில் சென்ற ஐயப்பன் மற்றும் பூபாலன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். சாலையை கடந்தபோது கார் ேமாதி இறந்தவர் யார் என்ற விபரம் தெரியவில்லை.
இதுபற்றி தகவல் அறிந்த மயிலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலங்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் மூன்று சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே விபத்து நடந்ததும் கார் டிரைவர் சேதமடைந்த காரை நிறுத்தி விட்டு தப்பியோடிவிட்டார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.