ஆரம்பிச்சுட்டாரு திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக பொதுச்செயலாளர் அண்ணாமலையாம்…

திண்டுக்கல்: அதிமுக-பாஜ கூட்டணி முறிவுக்கு பிறகு பாஜ மாநில தலைவர் அண்ணாமலையை குறி வைத்து அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் கடுமையாக பேசி வருகிறார். அப்படி பேசும்போது அண்ணாமலையை, அதிமுக பொதுச்செயலாளர் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தமிழகத்தில் பாஜவை அழிக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம்’’ என்றார். அப்போது, ‘‘பாஜ கூட்டணியில் நீங்கள் இருக்கும்போது சிஏஏ சட்டத்துக்கு ஆதரவாக இருந்தீர்களே? இப்போது ஏன் எதிர்க்கிறீர்கள்’’ என நிருபர்கள் கேட்டபோது, பதிலளித்த திண்டுக்கல் சீனிவாசன், ‘‘இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் அண்ணாமலை ஏற்கனவே பதில் கூறியுள்ளார்’’ என உளறிக் கொட்டினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்பதற்கு பதிலாக, அண்ணாமலை என்று கூறியது அக்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Related posts

டி20 உலக கோப்பை வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி