மேற்காணும் மேம்பாலம் இன்று 24.11.2023 ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையிலும், மாண்புமிகு உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் முன்னிலையிலும், மாண்புமிகு பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்களால் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. இந்த மேம்பாலம் பாலகிருஷ்ணாபுரம், செங்குறிச்சி, அதிகாரிப்பட்டி, திருமலைக்கேணி, மணக்காட்டுர் மற்றும் சுற்றுவட்ட கிராம மக்கள் காலதாமதமின்றி மூன்று கடவுகளையும் கடந்து செல்ல பயனுள்ளதாக அமையும். ஏறக்குறைய 1,00,000 மக்கள் இச்சாலை மேம்பாலம் திறப்பதன் மூலம் பயனடைவர்.