இப்பணியில் ஈடுபட்டிருந்த சரவணன், வசூலான வரி தொகையை வங்கியில் செலுத்தியது போன்று போலி சலான் தயாரித்து ரூ.4.68 கோடி மோசடியில் ஈடுபட்டது கணக்கு தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நிதிப்பிரிவில் பணி புரிந்த அலுவலக உதவியாளர் சதீஷ், இவர்களை கண்காணிக்க தவறிய கண்காணிப்பாளர் சாந்தி ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் இதுகுறித்து மாவட்ட எஸ்பி பிரதீப்பிடம், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் புகார் அளித்தார். இதன்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்றிரவு சரவணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.