திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சந்தரபுரி என்ற கிராமத்தில் தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இதில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று பாறைகளை உடைப்பதற்காக வெடிவைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது குவாரியின் மேல் பகுதியில் இருந்து கற்க்கள் சரிந்து வெடியின் மீது விழுந்ததால் திடீரென அந்த வெடி வெடித்து சிதறியது.
இந்த விபத்தில் வெடி வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அரசம்பட்டியை சேர்ந்த நாராயணன், சுந்தரபுரியை சேர்ந்த வேலு ஆகிய இருவரும் உடல் சிதறி சம்பவ இடைத்திலேயே பலியாகினர். மேலும் சுந்தரபுரியை சேர்ந்த கோபால், மரியப்பன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். படுகாயமடந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றனர்.
தொடர்ந்து இது குறித்து தகவலறிந்த வடமதுரை போலீசார் சம்பவ இடைத்திற்கு வந்து இறந்த இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அணுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.