திருவிழாவின் முக்கிய நாளான நேற்று குழந்தையை கோயிலில் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது. குழந்தை வரம் கேட்டு செபஸ்தியாரிடம் வேண்டுதல் வைக்கும் தம்பதியர் குழந்தை பிறந்தவுடன் ஆடி மாத திருவிழாவின் போது அந்த குழந்தையை கோயிலில் ஒப்படைத்து விடுவர். பின்னர் அந்த குழந்தையை கோவில் நிர்வாகத்தினர் ஏலம் விடுவர். இதில் பங்கேற்று அதிக தொகை கொடுத்து ஏலம் எடுக்கும் நபர்கள் அந்த பணத்தை கோயிலில் காணிக்கையாக செலுத்துவர். பின்னர் ஏலம் எடுத்தவர்களிடம் இருந்து அந்த தொகையை கொடுத்து பெற்றோரே அந்த குழந்தையை வாங்கி செல்வர். பிரசித்தி பெற்ற நேர்த்திக்கடன் விழா பேராலயம் வளாகத்தில் விமர்சியாக நடைபெற்றது.