திருமணத்திற்கு துணி எடுத்து முடித்துவிட்டு நள்ளிரவு வீடு திரும்பிய போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாய் கண்டு சவுரிமுத்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 100 பவுன் நகையும் ரூ.20 ஆயிரம் பணமும் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விரைந்து வந்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து குற்றவாளிகளின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் இவர்கள் வீட்டின் அருகே உள்ள வீட்டில் சிசிடிவி கேமரா வைத்துள்ளனர். அந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்த்ததில் 2 இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேர் வீட்டின் உள்ளே செல்வது தெரியவந்துள்ளது. இதை அடுத்து போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.