திண்டுக்கல்: திருப்பதியில் லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி புட் நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். திருப்பதி லட்டு தயாரிக்க ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் இருந்து அனுப்பப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலப்பு என சர்ச்சை. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் அனிதா உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு. அதிகாரிகள் ஏஆர் டெய்ரி நிறுவனத்தில் அதிரடி ஆய்வு நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.