மிசோரம் நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 29ஆக உயர்வு

அய்சால்: மிசோரமில் அய்சால் மாவட்டத்தில் உள்ள அய்பாக் கிராமத்தில் கடந்த செவ்வாயன்று அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 28 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கொலாசிப் மாவட்டத்தில் ஹார்டோகி கிராமத்தில் உள்ள ஆற்றில் இருந்து பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் ஆற்றில் அடித்து வரப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பலி எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்