இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் பாஜக தலைவர் அகோரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் தனக்கு ஜாமின் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி தமிழ்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அவருக்கு ஜாமின் வழங்கக்கூடாது என கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார். மேலும் மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ.க. தலைவர் அகோரம் மீது 47 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறை தகவல் தெரிவிக்கப்பட்டது. 47 வழக்குகள் நிலுவையில் உள்ளதால் பா.ஜ.க. மாவட்ட தலைவர் அகோரத்துக்கு ஜாமின் வழங்கக்கூடாது எனவும் காவல்துறை மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் காவல்துறை வாதத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்தது.