Thursday, June 27, 2024
Home » அச்சன்கோவில் தர்மசாஸ்தா மஹோற்சவ விழா ஐயப்பனின் திருஆபரண பெட்டிக்கு தென்காசியில் உற்சாக வரவேற்பு: திரளான பக்தர்கள் தரிசனம்

அச்சன்கோவில் தர்மசாஸ்தா மஹோற்சவ விழா ஐயப்பனின் திருஆபரண பெட்டிக்கு தென்காசியில் உற்சாக வரவேற்பு: திரளான பக்தர்கள் தரிசனம்

by Arun Kumar

தென்காசி: அச்சன்கோவில் தர்மசாஸ்தா கோயில் மஹோற்சவ விழாவை முன்னிட்டு ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக கேரளாவில் இருந்து எடுத்து வரப்பட்ட ஐயப்பனின் திருஆபரண பெட்டிக்கு தென்காசியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தமிழகத்தில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளை போன்று ஐயப்பனுக்கு கேரளாவில் ஐந்து படை வீடுகள் உள்ளன. இவற்றில் ஆரியங்காவு, குளத்துப்புழா, பந்தளம், அச்சன்கோவில் ஆகியவை சபரிமலைக்கு அடுத்தபடியாக புகழ் பெற்றவையாகும். இதில் அச்சன்கோவில் தமிழகத்தின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது.

ஆண்டுதோறும் இங்கு மார்கழி மாதம் ஆராட்டு மஹோற்சவ திருவிழா 10 நாட்கள் நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு ஐயப்பனுக்கும், கருப்பசாமிக்கும் அணிவிப்பதற்காக தங்ககிரீடம், முகம், மார்பு, கைகள், கால்கள், உடல் கவசம் மற்றும் வாள் உள்ளிட்ட ஆபரணங்கள் திருவிழாவிற்கு முதல் நாளில் புனலூர் அரசு கருவூலத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் எடுத்து வரப்படும். வைரம் மற்றும் விலை உயர்ந்த முத்துக்களால் செய்யப்பட்டுள்ள இந்த ஆபரணங்கள் வரும் வழியில் செங்கோட்டை, தென்காசி ஆகிய இடங்களில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும்.

இந்தாண்டு அச்சன்கோவில் தர்மசாஸ்தா கோயிலில் இன்று (17ம் தேதி) காலை 9 மணிக்கு மஹோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக நேற்று காலையில் புனலூர் அரசு கருவூலத்தில் இருந்து ஐயப்பனின் உருவங்கள், வாள், கருப்பசாமியின் ஆபரணங்கள் அடங்கிய பெட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது. இந்த ஆபரண பெட்டிக்கு தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலின் முன்பு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மதியம் 2.10 மணி முதல் 3.30 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் ஆபரண பெட்டி பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டு இருந்தது. ஆபரணப்பெட்டியை ஏராளமானோர் தரிசனம் செய்தனர். பின்னர் அச்சன்கோவில் நோக்கி ஆபரணப் பெட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

You may also like

Leave a Comment

thirteen − eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi