Friday, August 23, 2024
Home » தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி

by MuthuKumar

சென்னை: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். பாலக்கோடு அருகே ஜெர்த்தலாவ் கிராமத்தில் நேற்று மாலை 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 21 பேர் காயமடைந்தனர்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், ஜெர்த்தலாவ் கிராமம், பாரதியார் நகர் அருகில் நேற்று (15.07.2024) மாலை சுமார் 05.30 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த 21 நபர்கள் பலத்த காயமடைந்ததோடு இவ்விபத்தில் மேலும் பலர் காயமடைந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன். இந்த விபத்தில் காயமடைந்து தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்விபத்தில் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதோடு, பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

fifteen + one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi