தருமபுரியில் உள்ள அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 8736 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ரூ.560 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.350 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 993 திட்டப்பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். தருமபுரி மாவட்டத்தில் ரூ.152 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 879 திட்டப்பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.34 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 41 திட்டப்பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். சேலம் மாவட்டத்தில் ரூ.164 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 73 திட்டப்பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.