தருமபுரி: பாப்பாரப்பட்டி அருகே அரசுப் பள்ளியில் குடிநீர் தொட்டியில் துர்நாற்றம் வீசுவதாகப் புகார் எழுந்துள்ளது. பனைகுளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி குடிநீர் தொட்டியில் தடயவியல் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மனிதக் கழிவு அல்லது பறவை எச்சம் ஏதும் குடிநீர் தொட்டியில் கலந்துள்ளதா என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.