தாராவி மறுசீரமைப்பு திட்ட விவகாரம் 255 ஏக்கர் உப்பள நிலத்தில் வீடுகள் கட்டித்தர ஒப்புதல்: மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு

மும்பை: மும்பை தாராவி பகுதியில் குடிசைகளை இடித்து விட்டு, தாராவி மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் அதில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தரப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை ஏலம் மூலமாக அதானி குழும நிறுவனம் பெற்றுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தாராவியில் வசிக்கும் பலரும் இலவச வீடுகளை பெற தகுதியற்றவர்களாக உள்ளனர். அவர்களுக்கு வேறு பகுதியில் மலிவு விலை வாடகை வீடுகளை கட்டித்தர திட்டம் வகுக்கப்பட்டது. இதற்காக மவுஜே கஞ்சூரில் 120.5 ஏக்கர், கஞ்சூர் மற்றும் பாண்டுப்பில் 76.9 ஏக்கர், முலுண்டில் 58.5 ஏக்கர் என மொத்தம் 255.9 ஏக்கர் உப்பள நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலம் ஒன்றிய அரசுக்கு சொந்தமானது. எனவே இவற்றை குத்தகைக்கு தர மகாராஷ்டிரா அரசு சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தது. இதற்கான ஒப்புதலை ஒன்றிய அரசு இம்மாத தொடக்கத்தில் வழங்கியது. இதைத் தொடர்ந்து, 255.9 ஏக்கர் உப்பள நிலத்தில் வீடுகள் கட்ட முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் நேற்று ஒப்புதல் வழங்கப்பட்டது.

Related posts

மக்கள் பணி, கட்சிப்பணியில் கவனம் செலுத்துவோம் என்னை சந்திக்க சென்னைக்கு வருவதை திமுகவினர் தவிர்க்கவும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

இன்று தேசிய தன்னார்வ ரத்ததான தினம்; ரத்ததானம் செய்பவர்களை உளமார பாராட்டுகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி

லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் பி.எட் படிப்புக்கான கலந்தாய்வு 14ம் தேதி முதல் தொடங்குகிறது