கல்லூரி நிர்வாக இயக்குநர் பி.மணி முன்னிலை வகித்தார். முன்னதாக, தந்தை பெரியார் குறித்தும், சமூகநீதி நாளின் சிறப்புகள் குறித்தும் கல்லூரி மாணவர்களிடையே வினாடி-வினா போட்டிகள் நடந்தன. இந்நிகழ்ச்சியில், மாணவர்களிடையே கல்லூரி முதல்வர் மனுவேல்ராஜ் பேசுகையில், ‘தந்தை பெரியாரின் சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு, பெண் அடிமைத்தனத்தை ஒழிக்க, பெண்கள் சம உரிமை பெற தனது சமூகநீதி கருத்துக்களால் புதிய மாற்றங்களை ஏற்படுத்தியவர்.
அதை மாணவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் உண்மையான சமூக நீதியை பற்றி நீங்கள் புரிந்துகொள்ளவும், அறிந்து கொள்ளவும் முடியும் என்று எடுத்துரைத்தார். இதனையடுத்து, வினாடி-வினா போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள், மாணவ – மாணவிகள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.