சென்னை: தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு தர டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தி கேரளா ஸ்டோரி திரையிடப்படும் அனைத்து திரையரங்குகளையும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.