இப்போட்டியில் தமிழ்நாடு காவல்துறை பளுத்தூக்கும் குழு (பளுத்தூக்குதல், வளுத்தூக்குதல், யோகா) அணியை சார்ந்த 75 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்டு 1-தங்கம், 3-வெள்ளி, 10-வெண்கலம் ஆக மொத்தம் 14 பதக்கங்கள் பெற்று தமிழ்நாட்டிற்கும் தமிழக காவல்துறைக்கும் பெருமை சேர்த்துள்ளனர். மேற்கண்ட வீரர்களை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி பதக்கங்களை வழங்கினார்.
மேலும் கூடுதல் காவல்துறை இயக்குநர், ஆயுதப்படை, சென்னை மற்றும் கூடுதல் காவல்துறை இயக்குநர், கடலோர காவல் குழுமம், சென்னை ஆகியோர் உடனிருந்து மேற்கண்ட வீரர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.