சென்னை: நிதி மோசடி நிறுவனங்களுக்கு முகவர்களாக செயல்பட்ட 1500 பேரின் சொத்துக்களை முடக்கும் பணியினை மேற்கொள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு அளித்துள்ளார். முதலீட்டு நிறுவனங்களில் ஆரம்ப காலங்களில் சேர்ந்து பெரும் லாபம் அடைந்த முதலீட்டாளர்களிடமிருந்து இழப்பீடு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொருளாதார குற்றப்பிரிவுக்கு டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.